Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

108 திவ்யதேச பெருமாள் வைபவம் இன்று ... திருமயம் பெருமாள் கோவிலில் வைகுண்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செந்தூர் கோயிலில் புத்தாண்டு கட்டண தரிசனம் மூலம் ரூ.13 லட்சம் வசூல்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 ஜன
2012
11:01

திருச்செந்தூர்:திருச்செந்தூர் முருகன் கோயிலில் புத்தாண்டு ஜன. 1ம் தேதி ஒருநாள் மட்டும் தரிசன கட்டணம் மூலம் வருமானம் கடந்த ஆண்டைவிட அதிகமாக (3.25) லட்சத்தை தாண்டியதாக கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் தெரிவித்தார்.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் நிரூபர்களிடம் கூறியதாவது, கோயிலில் கடந்த 2011ம் வருடம் புத்தாண்டு முதல் நாளன்று தரிசனகட்டணம் மூலம் 9 லட்சத்து 97 ஆயிரத்து (910) தொள்ளாயிரத்து பத்து ரூபாய் வசூலாகியுள்ளது. இந்த ஆண்டு 2012ம் வருடம் புத்தாண்டு முதல் நாளன்று தரிசன கட்டணம் மூலம் ரூ.13 லட்சத்து 28 ஆயிரத்து 650 வசூலாகியுள்ளது. அதே போல் 2010ம் டிசம்பர் மாதம் தரிசன கட்டணம், உண்டியல், அன்னதான உண்டியல் மற்றும் தங்கும் விடுதிகள் மூலம் கிடைத்த வருமானம் ரூ.ஒரு கோடியே 58 லட்சத்து 48 ஆயிரத்து 768 ரூபாய் ஆகும். இதே போல் கடந்த 2011 டிசம்பர் மாதம் கிடைத்த வருமானம் ரூ.ஒரு கோடியே 87 இலட்சத்து 95 ஆயிரத்து 635 ஆகும். இது 2010 டிசம்பர் மாதத்தை விட அதிகமாக ரூ.29 லட்சத்து 48 ஆயிரத்து 866 ரூபாயாக உள்ளது.தற்போது பக்தர்களின் வசதிக்காக வரிசை முறைகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இருந்த மேம்பாலத்தை அகற்றியதால் சுலபமாக தரிசனம் செய்ய முடியவில்லை என்று சிலபேர் வதந்திகளை பரப்பி வந்தனர். ஆனால் அது உண்மையல்ல. தற்போது உள்ள வரிசை முறையில் பக்தர்கள் சுலபமாக அனைத்து சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கோயில் வருமானம் அதிகரித்துள்ளது. ஆன ந்த விலாஸ் மண்டபத்தின் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 8ம் தேதி நடக்கிறது. மேற்கண்ட தகவல்களை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் கூறினார். நிகழ்ச்சியின் போது கோயில் கண்காணிப்பா ளர் ராமசாமி உடனிருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar