பதிவு செய்த நாள்
12
ஏப்
2018
03:04
ஊத்துக்கோட்டை : சந்தான வேணுகோபால சுவாமி கோவில் பணிகள் முடிந்து, வரும், 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஊத்துக்கோட்டை, தட்டாரத் தெருவில் உள்ளது சந்தான வேணுகோபால சுவாமி கோவில். பழமை வாய்ந்த இக்கோவில், சிதிலமடைந்து காணப்பட்டது. இதனால், பக்தர்கள் பங்களிப்புடன் கோவிலை சீரமைக்க கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது. இதையடுத்து, ஒரு ஆண்டாக கோவில் சீரமைக்கும் பணிகள் நடந்தன. பணிகள் முடிந்து, வரும், 22ம் தேதி, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையடுத்து, வரும், 20ம் தேதி, மாலை, 5:00 மணிக்கு, அஷக்ஞை, பகவத்பிரார்த்தனை, வேத ப்ரபந்த தொடக்கம், ஆசாரிய வர்ணம், வாஸ்து ஹோமம், முதல் கால யாக பூஜை, பூர்ணாஹூதி நிகழ்ச்சிகளுடன் விழா துவங்குகிறது. வரும், 21ம் தேதி, காலை, 7:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, அஷ்டபந்தனம் சாற்றுதல், மாலை, 4:00 மணிக்கு, மகா சாந்தி ஹோமம், திருமஞ்சனம், ரக் ஷாபந்தனம், மூன்றாம் கால யாக பூஜை, இரவு, 8:00 பூர்ணாஹூதி, சயனாதிவாசம் நடைபெறும்.
விழாவின் முக்கிய நாளான, வரும், 22ம் தேதி, காலை, 5:30 மணிக்கு, கோபூஜை, விஸ்வரூபம், நான்காம் கால யாக பூஜையும், காலை, 7:30 மணிக்கு, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து சுவாமி தரிசனம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்படும். மதியம், 3:00 மணிக்கு, சுந்தர வரதராஜ பஜனைக் குழுவினரின் பஜனை நிகழ்ச்சியுடன், சுவாமி வீதிஉலா நடைபெறும். 125 ஆண்டுகளுக்குப் பின், இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.