அம்மாபேட்டை: பவானி, ஊமாரெட்டியூர் செல்லியம்மன் கோவில் குண்டம் திருவிழா நேற்று நடந்தது. பவானி, அம்மாபேட்டை அருகிலுள்ள, ஊமாரெட்டியூர் செல்லியாண்டியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா கடந்த, 29ல், பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. குண்டம் திருவிழா நேற்று நடந்தது. நேற்று ஏராளமான பக்தர்கள், குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஊமாரெட்டியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள், அம்மனை வழிபட்டனர். நாளை வசந்த விழா, கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.