பதிவு செய்த நாள்
12
ஏப்
2018
03:04
கொடுமுடி: கொடுமுடி, மகுடேஸ்வரர் கோவிலில், வரும், 20ல், சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் கொடியேற்றம் நிகழ்ச்சியுடன், சித்திரை தேர்த்திருவிழா தொடங்குகிறது. வரும், 21 முதல், 27 வரை தினமும் கேடயம், பூதம், சிம்மம், திருக்கைலாயம், சேஷ, பஞ்சமூர்த்தி, கருட, யானை, விமானம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறவுள்ளது. முக்கிய நாளான, 28 காலை, 5:30 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளலும், தொடர்ந்து காலை, 8:35 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி, வண்டிக்கால் பார்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வரும், 29 காலை, 9:00 மணிக்கு நடராஜர் தரிசனம், 11:00 மணிக்கு சிவன் பெருமாள் புறப்பாடு, மாலை, 6:30 மணிக்கு கொடி இறக்கம், 30 மாலை, 6:30 மணிக்கு புஷ்ப பல்லக்கு, விடையாத்தி உற்சவத்துடன் சித்திரை தேர்த் திருவிழா நிறைவு பெறுகிறது.