கீழக்கரை: விவேகானந்த கேந்திரம், கன்னியாகுமரி கிராம முன்னேற்ற டிரஸ்ட் சார்பில் திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில் பிரகாரத்தில் 1008விளக்கு பூஜை நடந்தது. மாலையில் பஜனை, ஆன்மிக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள், மாதர் மாநாடு, பிரகார வீதியுலா நடந்தன. விவேகானந்தா கேந்திரத்தின் கிராம முன்னேற்ற திட்ட செயலர் ஐயப்பன், ஆயுட்கால தொண்டர் ந.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் தலைமையாசிரியர் பி.கே.மணி, விவேகானந்த மாணவர் இல்ல நிர்வாகி சிவராம் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சகோதரி சகுந்தலா மற்றும் கேந்திர தன்னார்வலர்கள் செய்திருந்தனர். திருவாடானை: தொண்டி வேம்பவயல் கிராமத்தில் உள்ள விஸ்வரூபகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 501 திருவிளக்குபூஜை நடந்தது.