சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2018 10:04
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் மழை பெய்து வருவதால் சதுரகிரிமலைப்பகுதிக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. . பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு சென்றுவர பக்தர்களுக்கு 3நாள் அனுமதி தரப்படுவது வழக்கம். சதுரகிரி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக சங்கிலிப்பாறை மாங்கனி ஓடை பகுதிகளில் மழைவெள்ளம் அதிகரித்துள்ளதால், வனத்துறை, பக்தர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது. இதன் காரணமாக பிரதோஷத்திற்காக மலைக்கு செல்ல வந்திருந்த பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சூழ்நிலையை பொறுத்து பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து நீர்வரத்து ஓடைகளில் குளிக்ககூடாது. ஓடை அருகே தங்க கூடாது. என்ற கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் 4 நாட்களுக்கு காலை 5 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.