திருத்தங்கல் மாரியம்மன் கோயிலில் பங்குனி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2018 10:04
சிவகாசி: திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா 14 நாட்களாக நடந்தது வருகிறது. அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து, மண்டகபடிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொங்கல் வைத்தல், அக்னி சட்டி கயிறு குத்து, ஆயிரம் கண்பானை, முளைபாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காலை தேரோட்டம் நடந்தது. காலை 10:30 மணிக்கு அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள்தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேர், ரதவீதிகளில் உலா வந்து நிலைக்கு வந்தது.