பதிவு செய்த நாள்
13
ஏப்
2018
11:04
ஸ்ரீபெரும்புதுார்: ராமானுஜர், 1001ம் ஆண்டு திரு அவதார உற்சவ விழாவில், தினமும் நடக்கும் திருமஞ்சனத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சரும நோய் தீர்க்கும் ஈரவாடை தீர்த்தத்தை பருகி பயனடைகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுாரில், ராமானுஜர் அவதரித்த, 1001ம் ஆண்டு விழா, ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், 12ல் துவங்கி, 21ம் தேதி வரை திருமஞ்சனம் நடக்கிறது. இந்த நாட்களில், தினமும் மதியம் ராமானுஜருக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. ராமானுஜரின் தானுகந்த திருமேனியில், பசும்பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால், சிறப்பு அபிஷேகம் செய்து திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. இதையடுத்து, ராமானுஜர் மீது உள்ள ஆடையை பிழிந்து, தீர்த்தம் எடுக்கப்படுகிறது. இது, ஈரவாடை தீர்த்தம் என, அழைக்கப்படுகிறது. இந்தத் தீர்த்தத்தை பக்தர்கள் பருகுவதால், பலவிதமான சரும நோய்களும், தோஷங்களும் விலகுவதாக நம்பப்படுகிறது.உற்சவ விழாவை முன்னிட்டு, தினமும் நடைபெறும் திருமஞ்சனத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஈரவாடை தீர்த்தத்தை பருகி பயனடைகின்றனர்.