பதிவு செய்த நாள்
13
ஏப்
2018
11:04
கோவில் திருவிழாக்களில், வாண வேடிக்கை நடத்துவதை தவிர்க்க வேண்டும் என, அறநிலையத்துறை கமிஷனர், ஜெயா உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும், கோடை காலத்தில், கோவில்களில், சித்திரை திருவிழா, தேர் திருவிழாக்கள் என, பல்வேறு விழாக்கள் நடத்தப்படும். இந்த விழாக்களின் போது, வாண வேடிக்கை முக்கிய நிகழ்வாக நடக்கும். இந்நிலையில், வாண வேடிக்கைக்கு, அறநிலையத்துறை தடை விதித்து உள்ளது.
இது தொடர்பாக, அறநிலையத்துறை கமிஷனர், ஜெயா அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கோடை காலம் என்பதால், கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் வாண வேடிக்கை நிகழ்ச்சிகளால், தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதை, கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கோவில் திருவிழாக்களின் போது, தீ விபத்து களை தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருப்பதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - நமது நிருபர் -