கருங்குழி: திருமலை வையாவூர் கோவிலின் சுற்றுச்சுவர் கட்டும் பணி துவங்கியது. தென் திருப்பதி என புகழப்படும், திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், கருங்குழி - வேடந்தாங்கல் இடையே உள்ளது. இக்கோவிலின் சுற்றுச்சுவர், நீண்ட காலமாக சிதிலமடைந்து கிடந்தது. தற்போது சுற்றுச்சுவரை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஒப்பந்தம் விடப்பட்டு, 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடக்கின்றன. இப்பணியை, வேலுார் சரக உதவி கோட்டப் பொறியாளர், கல்யாணசுந்தரம், காஞ்சி உதவி பொறியாளர், நந்தகுமார், நிர்வாக அதிகாரி, செந்தில் குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.