பதிவு செய்த நாள்
13
ஏப்
2018
12:04
திண்டிவனம்: தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவில், பிரம்மோற்சவ விழா வரும் 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திண்டிவனம் அடுத்த தீவனூரில் பொய்யாமொழி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், பிரம்மோற்சவ விழா வரும் 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி, அன்று காலை 7:30 மணிக்கு, கணபதி ஹோமமும், சுவாமி மாட வீதியுலா நடக்கிறது. இதன் தொடர்ச்சியாக 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை இரவு சுவாமி மாட வீதியுலா நடக்கிறது. மேலும், 25ம் தேதி காலை 11:00 மணிக்கு, 1008 பால்குட அபிஷேகமும், 26ம் தேதி பொய்யாமொழி விநாயக பெருமானுக்கு திருப்பூநூல் கல்யாணமும் நடக்கிறது. தொடர்ந்து 27ம் தேதி காலை 9:00 மணிக்கு திருத்தேர் விழாவும், 28ம் தேதி மாலை 4:00 மணிக்கு, புனித தீர்த்த குளத்தில் தீர்த்தவாரியும், 29ம் தேதி இரவு 12:00 மணிக்கு முத்து பல்லக்கு உற்சவமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சகுந்தலா அம்மாள், அதிகாரம் பெற்ற முகவர் மணிகண்டன் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்.