குன்னுார்:குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த, 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம், சகோதரர்கள் சங்கம் சார்பில், நடந்த சித்திரை தேர்த்திருவிழாவில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தன. தொடர்ந்து கம்பம் நடுதல், பெண்களுக்கு வளையல் அணிவித்தல், சீர்தட்டு ஊர்வலம் ஆகியவை நடந்தன. விநாயகர் கோவில் மண்டபத்தில், கல்யாண உபசரிப்பு, அக்னி சட்டி ஊர்வலம் ஆகியவை நடந்தன. தொடர்ந்து வேப்ப மர வாகனத்தில் கரக உற்சவத்துடன் அம்மன் திருவீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை சகோதரர்கள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.