நத்தம்: நத்தத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாரியம்மன் நகர்வலம் சென்றார். நேற்று முன்தினம் காலை முதல் பக்தர்கள் கோயிலுக்கு சென்று புத்தாண்டு தரிசனம் செய்தனர். அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. மாலை நகர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இரவு மின் அலங்கார ரதத்தில் அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி நகர்வலம் புறப்பட்டார். கடை வீதி, மூன்று லாந்தர், பஸ் நிலையம், மீனாட்சிபுரம் அவுட்டர் பகுதி வழியாக வலம் சென்று அதிகாலையில் அம்மன் கோயிலை அடைந்தார். வழி நெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் படைத்து வழிபட்டனர்.