பதிவு செய்த நாள்
16
ஏப்
2018
12:04
அச்சிறுப்பாக்கம்: அச்சிறுப்பாக்கம் அடுத்த, நடுப்பழனியில், மண்டலாபிஷேக பூர்த்திவிழா, நேற்று நடைபெற்றது. நடுப்பழனி எனப்படும், பெருங்கருணையில், மரகத தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இங்கு, கடந்த மார்ச்சில், 45 அடி உயரமுடைய பிரமாண்ட வேலாயுத ஸ்கந்த மூர்த்தி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷகம் நடைபெற்றது. தொடர்ந்து, மண்டலாபிஷேகங்களும், தினமும் நடந்தன. நேற்று, மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது. சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனைகளும், அபிஷேகமும் நடந்தது. பிரமாண்ட சிலைக்கு, கிரேன் மூலம் அபிஷேக நீர் ஊற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். இந்நிகழ்வின் போது, பெருங்கருணை தவிர்த்து, சுற்று வட்டார பகுதிகளில், மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.