Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆருத்ரா தரிசனம்: ... திருநள்ளார் கோவிலில் 3 லட்சம் பேர் தரிசனம்! திருநள்ளார் கோவிலில் 3 லட்சம் பேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷங்கள் : மூன்று மாதத்தில் மதிப்பீடு பணி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஜன
2012
04:01

புதுடில்லி: "பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் பாதுகாக்கப்பட்டு வரும் பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி, மூன்று மாதங்களில் துவங்கி, ஓராண்டுக்குள் முடிக்கப்படும் என, சுப்ரீம் கோர்ட் நியமித்த ஐவர் குழுவின் புதிய ஒருங்கிணைப்பாளர் வேலாயுதன் நாயர் தெரிவித்தார். கேரளா திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில், நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவற்றை மதிப்பீடு செய்ய சுப்ரீம் கோர்ட் புதிய ஒருங்கிணைப்பாளராக தேசிய அருங்காட்சியக மைய தலைவர் வேலாயுதன் நாயரை நியமித்துள்ளது.

மதிப்பீடு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள என்.வேலாயுதன் நாயர் கூறியதாவது: பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் உள்ள பொக்கிஷங்களை, மதிப்பீடு செய்யும் பணி, இன்னும் மூன்று மாதங்களில் துவங்கும். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், மூன்று மாதத்திற்குள் முடிக்கப்படும். பொக்கிஷங்கள் மதிப்பீடு பணி துவங்கினால், ஓராண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொக்கிஷங்களை மதிப்பீடு செய்வதற்கு வசதியாக தேவைப்படும் உபகரணங்கள், ஒரு மாதத்திற்குள் பெறப்படும். மதிப்பீடு குழு, பல்வேறு தொழில்நுட்ப காரணங்களால் முடங்கியிருந்தது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி துவங்கவே, முன்னர் திட்டமிடப்பட்டது. ஆனால், பணி நடக்கவில்லை. பொக்கிஷங்கள் எக்காலத்திலும் சேதமடையாத வகையில், உலகில் தலைசிறந்த அருங்காட்சியகங்களைப் போல், பாதுகாக்க உலக தரம் வாய்ந்த அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். அதற்காக உலக அருங்காட்சியக கவுன்சிலின் வழிமுறைகளை பின்பற்றுவோம். அதை செயல்படுத்த கடுமையாக முயற்சிப்போம். இவ்வாறு வேலாயுதன் நாயர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா இன்று (ஏப்.4ல்) திருஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் விழா ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் உற்சவம் முன்னிட்டு, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
மும்பை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar