பதிவு செய்த நாள்
21
ஏப்
2018
02:04
செஞ்சி: செத்தவரை மீனாட்சி உடனுறை சொக்கநாதர் கோவிலில் சித்திரை பெருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. செஞ்சி தாலுகா செத்தவரை நல்லாண்பிள்ளை பெற்றாள் சிவஜோதி மோன சித்தர் ஆசிரமத்தில் உள்ள மீனாட்சி உடனாகிய சொக்கநாதர் கோவிலில், 10 நாட்கள் நடைபெறும் 7 ம் ஆண்டு சித்திரை பெருவிழா நேற்று துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:30 மணிக்கு சிறப்பு ஹோமமும், தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும் செய்தனர். அதிகாலை 5:30 மணிக்கு சிவஜோதி மோனசித்தர் தலைமையில் கொடியேற்று விழா நடந்தது. மாலை 3:00 மணிக்கு மீனாட்சியம்மன், சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று (21ம் தேதி) முதல் 28ம் தேதி வரை தினமும் சிறப்பு அபிஷேக அலங்காரம், சாமி கோவில் உலாவும் நடைபெற உள்ளது. வரும் 29ம் தேதி காலை 11:00 மணிக்கு சிவஜோதி மோனசித்தர் முன்னிலையில், சாமி திருக்கல்யாண உற்சவமும் நடக்க உள்ளது. விழாவை முன்னிட்டு தொடர் அன்னதானம் வழங்கி வருகின்றனர். விழா ஏற்பாடுகளை சிவஜோதி மோன சித்தர் ஆசிரம டிஸ்டிகள், செயற்குழு உறுப்பினர்கள், சிவனடியார்கள், செந்தவரை, நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.