பதிவு செய்த நாள்
21
ஏப்
2018
02:04
திருவண்ணாமலை: செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவிலில், நேற்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில், 86 ஆயிரத்து, 875 ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் பகுதியில், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலமாக விளங்குவது, பால குஜாம்பிகை, உடனுறை வேதபுரீஸ்ரவர் கோவிலாகும். இக்கோவிலில், எட்டு நிரந்தர உண்டியல்கள் உள்ளன. மூன்று மாதத்திற்கு, ஒரு முறை உண்டியல் எண்ணிக்கை நடத்தப்படும். நேற்று காலை, அறநிலையத்துறை ஆய்வாளர் ராஜா தலைமையில், பள்ளி மாணவர்கள், தன்னாவலர்கள் என, 50க்கும் மேற்பட்டோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 86 ஆயிரத்து, 875 ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.