பதிவு செய்த நாள்
21
ஏப்
2018
04:04
மயிலாடுதுறை: சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் கோயிலில் திருமுலைப்பால் விழா சிறப்பாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
நாகை மாவட்டம் சீர்காழியில், தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவிலில் உள்ளது. இங்கு சுவாமி பிரமபுரீசுவரர், தோணியப்பர், சட்டைநாதர், குரு, லிங்க, ச ங்கமம் என்று மூன்று நிலைகளில் எழுந்தருளி காட்சி அளிக்கின்றனர். சீர்காழியில் அவதரித்த திருஞான சம்பந்தருக்கு, அம்பாள், கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக்கரையில் ஞானப்பால் வழங்கினார். இதனால் ஞானம்பெற்ற திருஞான சம்பந்தர் தனது 3வது வயதில் தேவாரத்தின் முதல் பாடலான தோடுடைய சிவனே என்ற பாடலை பாடினார். இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் இந்த கோயிலில் திருமுலைப்பால் விழா நடத்தப்படுவது வழக்கம். இவ்வாண்டு திருமுலைப்பால் விழா இன்று மதியம் தருமை ஆதின இளைய சன்னிதா னம் ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் முன்னிலையில் நடந்தது.
விழாவை முன்னிட்டு காலை சன்னதி மண்டபத்தில் எழுந்தருளிய திருஞானசம்பந்த பெருமானு க்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஓதுவார்கள் தேவாரம்பாட திருஞானசம்பந்தர் பல்லக்கில் பிரம்ம தீர்த்தக்கரைக்கு எழுந்தருளினார். மதியம் 1 மணிக்கு உமையம்மை புஷ்ப பல்லக்கில் வந்து பிரம்ம தீர்த்த கரையில் எழந்தருளி, திருஞானசம்பந்தருக்கு தங்க கின்னத்தில் ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைதொடர்ந்து சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பிரம்ம தீர்த்தக்கரையில் எழுந்தருளி திருஞானசம்பந்தருக்கு காட்சியளித்தனர். அப்போது சுவாமி, அம்பாள், திருஞானசம்பந்தருக்கு மகா தீபாராத னை நடைபெற்றது. விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பலா, வாழை, பேரிட்சை பழங்களுடன், சர்க்கரை கலந்த பாலை சுவாமி, அம் பாளுக்கு நைய் வேத்தியம் செய்து குழந்தைகள் ஞானம் பெற பிரார்த்தனை செய்தனர். விழாவை முன்னிட்டு திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.