Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை ... வசந்த உற்சவம்: அண்ணாமலையாருக்கு பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சி வசந்த உற்சவம்: அண்ணாமலையாருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி சட்டைநாதர் கோயிலில் திருமுலைப்பால் விழா: பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2018
04:04

மயிலாடுதுறை:  சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் கோயிலில் திருமுலைப்பால் விழா சிறப்பாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

Default Image
Next News

நாகை மாவட்டம் சீர்காழியில், தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவிலில் உள்ளது. இங்கு சுவாமி பிரமபுரீசுவரர், தோணியப்பர், சட்டைநாதர், குரு, லிங்க, ச ங்கமம் என்று மூன்று நிலைகளில் எழுந்தருளி காட்சி அளிக்கின்றனர். சீர்காழியில் அவதரித்த திருஞான சம்பந்தருக்கு, அம்பாள், கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக்கரையில் ஞானப்பால் வழங்கினார். இதனால் ஞானம்பெற்ற திருஞான சம்பந்தர் தனது 3வது வயதில் தேவாரத்தின் முதல் பாடலான தோடுடைய சிவனே என்ற பாடலை பாடினார்.  இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் இந்த கோயிலில் திருமுலைப்பால் விழா நடத்தப்படுவது வழக்கம். இவ்வாண்டு திருமுலைப்பால் விழா இன்று மதியம் தருமை ஆதின இளைய சன்னிதா னம் ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் முன்னிலையில் நடந்தது.

விழாவை முன்னிட்டு காலை சன்னதி மண்டபத்தில் எழுந்தருளிய திருஞானசம்பந்த பெருமானு க்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஓதுவார்கள் தேவாரம்பாட திருஞானசம்பந்தர் பல்லக்கில் பிரம்ம தீர்த்தக்கரைக்கு எழுந்தருளினார்.  மதியம் 1 மணிக்கு உமையம்மை புஷ்ப பல்லக்கில் வந்து பிரம்ம தீர்த்த கரையில் எழந்தருளி, திருஞானசம்பந்தருக்கு தங்க கின்னத்தில் ஞானப்பால் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைதொடர்ந்து சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பிரம்ம தீர்த்தக்கரையில் எழுந்தருளி திருஞானசம்பந்தருக்கு காட்சியளித்தனர். அப்போது சுவாமி, அம்பாள், திருஞானசம்பந்தருக்கு மகா தீபாராத னை நடைபெற்றது.  விழாவில்  தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பலா, வாழை, பேரிட்சை பழங்களுடன், சர்க்கரை கலந்த பாலை சுவாமி, அம் பாளுக்கு நைய் வேத்தியம் செய்து குழந்தைகள் ஞானம் பெற பிரார்த்தனை செய்தனர். விழாவை முன்னிட்டு திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar