பதிவு செய்த நாள்
24
ஏப்
2018
02:04
செஞ்சி: செஞ்சிக் கோட்டை கமலக்கன்னியம்மன் கோவில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. செஞ்சிக் கோட்டை ராஜகிரி மலை மீது, ஆயிரம் ஆண்டுகள் பழமையான கமலக்கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை தேர்த் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை 6:00 மணிக்கு, கமலக்கன்னியம்மன், மகா மாரியம்மன், ராஜகாளியம்மன், கோட்டை வீரனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 9:00 மணிக்கு, மகா மாரியம்மன் கோவிலில் கணபதி, லட்சுமி மற்றும் 108 திரவிய ஹோமம் நடந்தது. பின், 9:30 மணிக்கு, கொடி மரத்தில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து காப்பு அணிவித்தலும், இரவு அம்மன் வீதி உலாவும் நடந்தது. விழாவில் கோவில் அறங்காவலர் அரங்க ஏழுமலை, உபயதாரர்கள், விழாக் குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மே 1ம் தேதி, மதியம் 1:30 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நடக்க உள்ளது.