Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கூத்தாண்டவர் திருவிழா கோவில் திருவிழாவில் வினோதம்: அக்னி சட்டியுடன் பூஜாரி உருளுதண்டம் கோவில் திருவிழாவில் வினோதம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று புட்டப்பர்த்தி சாய்பாபா ஸித்தி தினம்
எழுத்தின் அளவு:
இன்று புட்டப்பர்த்தி சாய்பாபா ஸித்தி தினம்

பதிவு செய்த நாள்

24 ஏப்
2018
03:04

அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா ஸித்தி தினம் இன்று.

பக்தர்களுக்கு அவரது அறிவுரைகள் ..

* அறிவுரைகளை அள்ளி வீசுவதை விட, பயனுள்ள ஒரு செயலில் ஈடுபடுவது சிறந்தது.     
* ""எனக்கு எல்லாம் நீயே; உன்னை எனக்கு கொடு என கடவுளிடம் தினம் வழிபாடு செய்யுங்கள்.   
* வாழ்க்கையே பிரார்த்தனை. அதில் செயல் அனைத்தும் கடவுளுக்குரிய அர்ச்சனை.  
* கலியுகத்தில் கடவுளின் திருநாமம் சொல்வதை விட, சிறந்த வழிபாடு வேறில்லை.          
* கடவுள் மின்சக்தி. மனிதன் பல்பு. நாம் ஒளி வீசுவதற்கு கடவுளை நமக்குள் கொண்டு வர வேண்டும்.
* கடவுளிடம் அன்பு செலுத்துவது உண்மை என்றால், நீங்கள் எல்லா உயிர்களையும் நேசிக்கிறீர்கள் என்று பொருள்.   
* பொறுமையே தவம். திருப்தியே மகிழ்ச்சி. கருணையே புண்ணியம். கடவுளின் நாமமே பேரின்பம்.
* கடவுளை பூரணமாக சரணடைந்து விட்டால், விதி செயலிழந்து விடும்.
* அன்பான எஜமானராக கடவுள் இருக்கிறார். அவருக்கு உண்மையாக நடக்கும் ஊழியர்களை மட்டுமேபிடிக்கும்.
* முற்றிய தேங்காய் நைவேத்யமாகும் தகுதி அடைவது போல, பக்குவம் அடைந்த உள்ளம் கடவுளின் திருவடியை அடையும்.   
* உணவை மட்டுமல்ல; பக்தி என்னும் நல்ல உணர்வையும் தேடுவதே வாழ்க்கை.
* கடவுள் வழங்கிய  பாத்திரமான உள்ளத்தை y´மையாக பாதுகாப்பது நம் கடமை.   மனம் எனும் வயலில் அன்பை
பயிரிட்டு, சேவை எனும் நீர் பாய்ச்சுங்கள். இன்பம் என்னும் விளைச்சல் அறுவடையாகும்.       
* மனத் y´மையின்றி கடவுள் பெயரை மட்டும் சொல்வது என்பது, காயச்சலின் போது மருந்தின் பெயரை மட்டும் சொல்வது போலாகும்.
* பணத்தை நாம் ஆள வேண்டுமே ஒழிய, ஒருபோதும் பணம் நம்மை ஆளக்கூடாது.      
* உடல் நோய்க்கு எத்தனையோ மருந்துகள் இருக்கின்றன. மன நோய்க்கோ தன்னலம் அற்ற சேவையே மருந்து.      
* துன்ப இருளில் தவிக்கும் உயிர்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள். உங்கள் இதயத்தில் அருள் ஒளி பரவும்.    
 * உண்மையை விட மதிப்பு மிக்க விஷயம் வேறில்லை. அது ஒன்றே என்றும் நிலைக்கும்.      
* உடல் என்னும் இயந்திரம் இயங்க, உணவு என்பது எண்ணெய் போல அளவுடன் இருக்க வேண்டும்.      
* பணம் இல்லாதவன் ஏழை அல்ல. வேண்டாத ஆசை உள்ளவனே ஏழை.  
* பகலும் இரவும் போல இன்பமும் துன்பமும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வந்தே தீரும்.         
* கன்று வளரும் போதே அதற்கு கொம்பும் வளர்வது போல, செல்வம் வளரும் போதே செருக்கும் வளர்ந்து விடுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar