திருவையாறு : தியாகராஜரின் 165வது ஆராதனை விழா, மங்கள இசையுடன் திருவையாறில் இன்று துவங்கியது. 5 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழாவின் முக்கிய அம்சமான பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி, 13ம் தேதி நடைபெறுகிறது. கர்நாடக இசை ஆர்வலர்கள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பு மக்களும் திருவையாறில் குவிந்த வண்ணம் உள்ளனர்.