பதிவு செய்த நாள்
26
ஏப்
2018
12:04
கூவம்: கூவம், திரிபுரசுந்தரி சமேத திரிபுராந்தகசுவாமி கோவிலில், நேற்று, சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. கடம்பத்துார் ஒன்றியம்,
பேரம்பாக்கம் அடுத்துள்ள கூவம் கிராமத்தில் அமைந் துள்ளது. திரிபுரசுந்தரி சமேத திரிபுராந்தகசுவாமி கோவில். இங்கு, சித்திரை பெருவிழா, கடந்த , 19ம் தேதி,
கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையடுத்து, தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி பல்வேறு வாகனங்களில், வீதியுலா புறப்பாடும் நடந்து வருகிறது. விழாவின்முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. நேற்று, அதிகாலை, 5:30மணிக்கு, சுவாமி திருத்தேரில் எழுந்தருள, காலை, 7:00 மணிக்கு, தேரோட்டம் நடந்தது. இதில், கூவம், குமாரசேரி, பேரம்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் பங்கேற்றனர். இன்று, மாலை, 4:00 மணிக்கு, பிச்சாடனர் உற்சவமும், இரவு, 8:00 மணிக்கு, திருக்கல்யாணமும் நடைபெறும். நாளை, நடராஜர் அபிஷேகமும், 28ம் தேதி, காலை, 6:00 மணிக்கு, வள்ளுவன் காட்சியும், பகல்,
12:00 மணிக்கு, நடராஜர் அனுக்கிரக உற்சவமும், இரவு, பவழக்கால் சப்பரத்தில் சுவாமி வீதியுலாவும், அதைத் தொடர்ந்து, கொடியிறக்கமும் நடைபெறும்.