மீனாட்சி-சொக்கர் திருக்கல்யாண மண மேடை: ஒன்றரை டன் பூக்களால் அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2018 12:04
மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நாளை நடக்கும் திருக்கல்யாண மண மேடை ஒன்றரை டன் பூக்களால் அலங்கரிக்கும் பணி நடக்கிறது.
பூ அலங்கார ஒப்பந்ததாரர் செல்வராஜ் கூறியதாவது: கோயிலுக்குள் மேற்கு ஆடி வீதி, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் திருக்கல்யாண மண மேடை அமைக்கப்பட்டுள்ளது. நாளை நடக்கும் மீனாட்சி - சொக்கர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு மண மேடையின் மேற்கூரை 60 கிலோ வெட்டி வேர்களால் வேயப்படும். இதனால் கோயில் முழுவதும் நறுமணம் வீசுவதோடு குளுமையாக இருக்கும். மண மேடை அலங்காரத்திற்காக பெங்களூரு, ஊட்டி, கொடைக்கானலில் இருந்து ரோஜா, ஜர்டிரா, ஆர்கேட் போன்ற பூக்கள் ஒன்றரை டன் அளவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. அலங்காரப் பணியில் 70 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தாண்டு திருக்கல்யாண புதுமையாக மண மேடையின் மேற்கூரையில் இலைகளால் உருவாக்கப்பட்டு பச்சைக்கிளிகள் தொங்க விடப்படும். ஸ்ரீவில்லிபுத்துாரில் இலைக்கிளிகள் தயாரிக்கும் பணி துரிதமாக நடக்கிறது. பழைய திருக்கல்யாண மண்டபம் பூ அலங்கார ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் தலைமையில் நடக்கிறது, என்றார்.