குஜிலியம்பாறை, கூம்பூர் முத்தாலம்மன் கோயிலில், புதிய கட்டடம்கட்டும் பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன.கூம்பூரில், நுாறாண்டு பழமை வாய்ந்த முத்தாலம்மன் கோயில் உள்ளது. அக்காலவழக்கப்படி கூரையால் வேயப்பட்ட செட் அமைத்து அதற்குள் முத்தாலம்மன் உள்ளார். இந்த கோயிலில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா கொண்டாடுவர். இந்த கோயில் கூரையை அகற்றிவிட்டு, கான்கிரீட் கட்டடம் அமைக்க கிராம மக்கள்முடிவு செய்தனர். இதை தொடர்ந்து கடந்த வாரம் கோயில் முன் அமர்ந்து சயனம் கேட்கப்பட்டது. இதையடுத்து நேற்று ஊர் மக்கள் அழைக்கப்பட்டு, புதிய கட்டடம் கட்டுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதனால் நுாறாண்டு பழமை வாய்ந்தமுத்தாலம்மன் கோயிலுக்கும், புதுாரில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கும் சேர்த்து புதிய கட்டடம் கட்டும் பணிகள் துவங்கியுள்ளன. திரளான மக்கள் பங்கேற்று பணிகளை கவனித்தனர்.