மதுரை சித்திரை திருவிழாவுக்காக வைகை அணையில் நாளை நீர் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2018 01:04
ஆண்டிபட்டி: மதுரை சித்திரை திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து நாளை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக ஆண்டுதோறும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். கடந்த ஆண்டு நீர் இருப்பு குறைவாக இருந்ததால் திறக்கப்படவில்லை. சில நாட்களாகபெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு நீர் வரத்து தொடர்கிறது. இதனால் அணை நீர் மட்டம் நேற்று 37.96 அடியாக (மொத்த உயரம் 71 அடி) உயர்ந்தது.நீர் வரத்து வினாடிக்கு 114 கன அடியாக இருந்தது. மதுரை, ஆண்டிபட்டி-சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்கு வினாடிக்கு 48 கன அடிநீர் வெளியேறுகிறது. ஏப்., 30 ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து, நாளை காலை 6:00 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது, என, பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.