சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை விழா: மே1 ல் துவங்குகிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2018 01:04
சிவகாசி, சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா மே 1 இரவு 7:00 மணிக்குகொடி யேற்றத்துடன் துவங்குகிறது. இதைதொடர்ந்து,ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் அம்பிகை அலங்கரிக்கப்பட்டு பல்வேறு மண்டகபடி களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். முதல் நாள் வெள்ளி சிங்க வாகனம், இரண்டாம் நாள் காமதேனு வாகனத்தில் உலாவருவார். மூன்றாம் நாள் வெள்ளி ஊஞ்சலில் எழுந்தருளி நகர் வலம் வந்து கோயிலில் வீற்றீருப்பார். இரவு கைலாசபர்வத வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 4ம் விழாவில் வேதாள வாகனத்தில் வீத உலா வந்து அருள்பாலிப்பார். ஒவ்வொரு நாளும் வாணவேடிக்கையுடன் அம்பிகை வீதி உலா வருவது கண்கொள்ளா காட்சியாக அமையும். விழாவின் சிறப்பாக, நவதானிய வர்த்தகர்கள் பண்டு சார்பில் சிவன் சன்னதி முன் கல் மண்டகபடியில் நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசன த்தில் அம்மன் வீற்றிருந்து அருள் பாலிப்பார். சிவகாசி சுற்று கிராம மக்கள் அம்மனை தரிசித்து செல்வார்கள். பத்தாம் நாள் விழாவையொட்டி தேர் திருவிழா நடக் கிறது. வேண்டுதல்களை நிறைவேற்றிய அம்மனுக்கு பக்தர்கள் அக்னி சட்டி, மாவிளக்கு, கயர்குத்து, முடிகாணிக்கை, முத்து காணிக்கை, தவழும் பிள்ளை என நேர்த்திகடன் செலுத்துவது தனிச் சிறப்பு. 11ம்நாள் விழாவில் பத்திரகாளியம்மன், மாரியம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வரவிழா நிறைவடையும்.