பதிவு செய்த நாள்
27
ஏப்
2018
01:04
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடனும், தாரை வார்த்துக்கொடுக்க பவளக்கனிவாய் பெருமாளும் நேற்று திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து புறப்பட்டனர். இன்று அதிகாலை கோயிலில் எழுந்தருளினர். மீனாட்சி சுந்தரேஸ்வர், பிரியாவிடை, சித்திரை வீதிகளில் பட்டினபிரவேசம் முடிந்து, கோயிலுக்குள் ஊஞ்சல் மண்டபத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கும். பெற்றோர் திருக்கல்யாணத்தில் பங்கேற்றுவிட்டு, ஏப்.,29ல் விடை பெறும் நிகழ்ச்சி நடக்கும். மே 1 காலை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தெற்காவணி மூலவீதி மண்டபத்தில் எழுந்தருளுவர், மாலையில் பூப்பல்லக்கில் புறப்பாடாகி, பவளக்கனிவாய் பெருமாளுடன் திருப்பரங்குன்றம் கோயில் திரும்புவர். திருப்பரங்குன்றம் கோயில் நடை வழக்கம் போல் திறக்கப்பட்டிருக்கும்.