Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குற்றாலம் பராசக்தி கல்லூரியில் ... நாகநாத ஸ்வாமிகோவிலில் ஆருத்ரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹெத்தையம்மன் திருவிழா துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2012
11:01

கோத்தகிரி : நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுக மக்களின் குல தெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான விழா நேற்று துவங்கி, வரும் 16ம் தேதிவரை நடக்கிறது. ஹெத்தையம்மன் கோவில் அமைந்துள்ள பேரகணி, பெத்தளா, ஒன்னதலை, கூக்கல், பெப்பேன் மற்றும் சின்னகுன்னூர் உட்பட பல்வேறு கிராமங்களில் இவ்விழா நடக்கிறது. ஹெத்தையம்மன் பக்தர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த "சக்கலாத்தி என்ற பண்டிகையில் இருந்து விரதம் மேற்கொண்டுள்ளனர். திருவிழா கொண்டாடும் கிராமங்களில் உள்ள கோவிலில் இருந்து நேற்று காலை பக்தர்கள் கலாச்சார உடையணிந்து, குடைகளின் கீழ், அம்மனை "மடிமனை என்றழைக்கப்படும் கோவிலுக்கு அழைத்து சென்றனர். மடிமனைக்கு வந்த பக்தர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லாமல், அங்கேயே 8 நாட்கள் தங்கி விரதம் மேற்கொள்வது ஐதீகமாக உள்ளது. நாள்தோறும் மடிமனையில் காணிக்கை செலுத்துதல் மற்றும் அருள்வாக்கு போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. இவ்விழாவின் ஒரு கட்டமாக, நேற்று கோத்தகிரி கேர்பெட்டா கிராமத்தில், அம்மன் அழைப்பு, அருள்வாக்கு நடந்தது. நாளை பழமை வாய்ந்த பேரகணி ஹெத்தையம்மன் மடிமனையில், திருவிழா நடக்கிறது. இதில், நீலகிரி மாவட்டம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு காணிக்கை செலுத்துகின்றனர்.?பக்தர்களுக்காக அருள்வாக்கு மற்றும் அன்னதானம் நடக்கிறது. வரும் வெள்ளிக்கிழமை காத்துகுளி மடிமனையிலும், சனிக்கிழமை ஒன்னதலை மடிமனையிலும் திருவிழா நடக்கிறது. முக்கியத் திருவிழா நாளான 15ம் தேதி மடிமனையில் விரதம் இருந்த பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட அம்மனை, கிராமத்தில் உள்ள கோவிலுக்கு அழைத்து செல்கின்றனர். 16ம் தேதியும் விழா நடக்கிறது. கிராமத்தில் உள்ள சுத்தக்கல் என்ற கோவில் வளாகத்தில் காணிக்கை செலுத்தி அம்மனை வழிப்பட உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar