வத்திராயிருப்பு தர்மசாஸ்தா கோயிலில் வருஷாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2018 01:04
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் அணையை ஒட்டிய மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள துாங்காலக்கிழவனார் , தர்மசாஸ்தா கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. காலையில் பூரணகும்பம் வைத்து ஜெப பூஜைகள் நடத்தப்பட்டது. சுவாமிக்கு 18 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. பூஜையின் முடிவில் பூஜிக்கப்பட்ட கும்பநீரால் சுவாமி , கருப்பசாமி, வனப்பேச்சி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு பக்தர்கள் வெள்ளிக்கவசம் அணிவித்தனர். சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமிக்கு அன்னப்படையல் பூஜைகளும், அன்னதானமும் நடந்தது.