பதிவு செய்த நாள்
28
ஏப்
2018
02:04
தர்மபுரி: பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்ட சிவன் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி நெசவாளர்காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள நந்தி பகவானுக்கு மாலை, 5:00 மணிக்கு பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு மேல், மூலவர் மகாலிங்கேஸ்வரருக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், ஒட்டப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோவில், மொடக்கேரி ஆதிசக்தி சிவன் கோவில் உள்பட, மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில், பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜை, அபி?ஷகம் நடந்தது.