முத்தாலம்மன், முத்துகிருஷ்ண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2018 02:04
அலங்காநல்லூர், அலங்காநல்லூர் அருகே வெளிச்சநத்தம் மீனாட்சிபுரத்தில் முத்தாலம்மன், முத்துகிருஷ்ண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பட்டர்கள் வேதமந்தரங்கள் முழங்க கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வெளிச்சநத்தம், மீனாட்சிபுரம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
மேலுார்: துரோபதையம்மன் கோயிலில் ஏப்.,25ல் கணபதி ேஹாமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. மூன்றாம் நாள் முடிவில் நேற்றுசிவாச்சாரியார்கள் தட்சிணாமூர்த்தி மற்றும் ராஜா தலைமையில் கும்பாபிேஷகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பேரையூர்: சேர்வராயன்பட்டி காளியம்மன் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. அம்மனுக்கு விசேஷ அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பொங்கல் வழிபாடு உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.