Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முத்தாலம்மன், முத்துகிருஷ்ண ... பெரியகாண்டியம்மன், அண்ணமார் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்ச பாண்டவர் கோவிலில் திள்ளி விழா சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2018
02:04

கோத்தகிரி:கோத்தகிரி கோடநாடு மந்து பகுதியில் வசிக்கும் தோடர் பழங்குடியின மக்கள், பஞ்சபாண்டவர் கோவிலில், திள்ளி திருவிழாவை நடத்தினர்.கோடநாடு மந்து பகுதியில் இருந்து, இரண்டு கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது, 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பஞ்சபாண்டவர் கோவில். இக்கோவிலில், ஜனவரி மாதத்தில், தோடரின மக்கள், திருவிழா நடத்துவது வழக்கம். கடந்த சில நாட்களாக, கோவிலில், புனரமைப்பு பணிகள் நடந்துவந்தன. இப்பணி நிறைவடைந்த நிலையில், தற்போது திருவிழா கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து காலையில், கால்நடைகளுக்கு நடத்தப்படும் திள்ளி எனப்படும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், கோடநாடு மந்து உட்பட, 14 தோடர் கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இவ்விழாவில், கிராமத்தில் அமைந்துள்ள தொழுவத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள கல்துாணை செங்குத்தாக நிறுத்தும் பூஜை நடந்தது.

தொடர்ந்து, கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு காதுகுத்தும் நிகழ்ச்சி இடம் பெற்றது. மேலும், தோடரின மக்களுக்கே உரித்தான பாரம்பரிய நடனமாடி, பஞ்சபாண்டவருக்கு பூஜை நடத்தப்பட்டது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட பால்சோறு பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, எருமைகள் அழைத்துவரப்பட்டு, திள்ளி கல் அமைக்கப்பட்ட தொழுவத்தில் அடைத்து, அங்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோடநாடு மந்து தலைவர் கொச்சாடு குட்டன் தலைமையில் பலர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு, மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிஜிகள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar