Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் வி.ஐ,பி.,க்கள் ... படுகரின மக்களின் பண்டிகை: நீலகிரியில் அரசு விடுமுறை! படுகரின மக்களின் பண்டிகை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சத்குரு தியாகராஜர் ஆராதனை விழா: திருவையாறில் கோலாகல துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 ஜன
2012
11:01

தஞ்சாவூர்: திருவையாறில் ஸ்ரீசத்குரு தியாகராஜர் ஸ்வாமிகளின் 165வது ஆராதனை விழா, கோலாகலமாக துவங்கியது.தஞ்சை மாவட்டம், திருவையாறு ஸ்ரீதியாக பிரம்ம மகோற்சவ சபா சார்பில், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு தியாகராஜ ஸ்வாமிகளின், 165வது ஆராதனை விழா, மங்கள இசையுடன் துவங்கியது.

திருப்பதி தேவஸ்தான சேர்மனும், எம்.பி.,யுமான, கண்மூரி பாசிராஜு குத்துவிளக்கேற்றி, ஆராதனை விழாவை துவக்கி வைத்து பேசியதாவது:சத்குரு தியாகராஜர் வாழ்ந்து முக்தியடைந்ததால், திருவையாறு புண்ணிய பூமியாக விளங்குகிறது. இவ்விழா தொடர்ந்து, 165 ஆண்டாக நடப்பதில் இருந்தே, தியாகராஜரின் தியாகம் மற்றும் அவரது கீர்த்தனையின் பெருமையை உணர முடிகிறது. தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை எந்த ஊராக இருந்தாலும், இடம் கொடுத்தால், திருப்பதி தேவஸ்தானம் சார்பில், 50 கி.மீ., இடைவெளியில் பக்தர்களுக்கு தங்குமிடம் கட்டித்தர தயாராக உள்ளோம். இவ்வாறு கண்மூரி பாசிராஜு பேசினார். மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் வாசன், தஞ்சாவூர் கலெக்டர் பாஸ்கரன், ஸ்ரீதியாக பிரம்ம மகோற்சவ சபா தலைவர் ஜி.ஆர். மூப்பனார் உட்பட பலர் பங்கேற்றனர். துவக்கவிழாவையொட்டி, நேற்றுமுன்தினம் மாலை 5 மணிக்கு, ஷேக் மகபூப் சுபானி- காலிஷா பீவி மகபூப் நாதஸ்வரம், கோவிலூர் கல்யாணசுந்தரம், ஸ்ரீரங்கம் முருகன் தவில் வாசிக்க மங்கள இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று முதல் ஜன.,13 வரை, காலை 8 முதல் இரவு 11 மணி வரை இசைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஜன.,12 ல், காலை 6 முதல் 8 மணி வரை தியாக பிரம்ம மகோற்சவ சபையின் சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்தின கீர்த்தனை, ஜன.,13 காலை 9 மணிக்கு நடக்கிறது. அன்று இரவு பஞ்சரத்ன மல்லாரியுடன், தியாகராஜ சுவாமி திருவுருவச்சிலை ஊர்வலம் நடக்கிறது. இரவு ஆஞ்சநேய உற்சவத்துடன், நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாள் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை தும்புரு தீர்த்த முக்கோட்டி என்பது ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் உத்திர பால்குனி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னையில் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar