Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பரமக்குடி கோயிலில் சந்தன அபிஷேகம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பர்மா நகர் கோவில் தீ மிதி திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஏப்
2018
02:04

எண்ணுார்: எண்ணுார், பர்மா நகர் கோவில் தீ மிதி திருவிழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பர்மாவில் இருந்து, 1964ல், அதிகளவிலான தமிழர்கள் தாயகம் திரும்பினர். அதில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், எண்ணுார், பர்மா நகரில் வசிக்கின்றனர். பர்மாவில் இருந்து மண் எடுத்து வரப்பட்டு, அங்கிருப்பது போலவே இங்கும், ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவில் கட்டி, வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலின், 52ம் ஆண்டு தீ மிதி திருவிழா, 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றைய தினமே, கோவில் வளாகத்தில், 1.36 கோடி ரூபாய் செலவில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட, 43 அடி உயர ஆஞ்சநேயர் சிலை, 45 அடி உயர அங்காள ஈஸ்வரி சிலைகளுக்கு, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, 10 நாட்களும், பர்மா நகரில் உள்ள, 11 தெருக்களிலும், அம்மன் வீதி உலா நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி திருவிழா, நேற்று இரவு நடைபெற்றது. இதில், 10 நாட்களாக காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள், பாரதியார் நகர் கடற்கரையில் நீராடி, பல வகைகளில் அலகுகள் குத்தியும், குண்டுவேல், இளநீர் அலகு, துாக்க நேர்ச்சை, தீச்சட்டி ஏந்தியும், முதுகில் அலகு குத்தி கார், ஆட்டோவையும் இழுத்தவாறு, கோவிலை நோக்கி அருளாடி வந்தனர். பின், கோவிலில் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட அக்னி மேடையில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் சிவகாமி அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.உலகப் புகழ் பெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar