முதுகுளத்துார், முதுகுளத்துார் பத்திரகாளிஅம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. நாடார் உறவின் முறைத் தலைவர் சிவக்குமார் தலைமையிலும், செயலாளர் பெருமாள்,பொருளாளர் அசோகன்,துணைத் தலைவர் வயணப்பெருமாள் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் அம்மனுக்கு பால்,மஞ்சள், இளநீர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.