Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சக்திமாரியம்மன் கோயிலில் சித்ரா ... சித்ரா பவுர்ணமி விழா அம்மன் வீதி உலா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
’கோவிந்தா... கோபாலா...’ கோஷத்துடன் ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2018
01:05

போடி : போடியில் சீனிவாசப் பெருமாள் கள்ளழகர் வேடத்தில் நீலப்பட்டு உடுத்தி கொட்டகுடி ஆற்றில் இறங்கினார். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு போடி சீனிவாசப்பெருமாள் கள்ளழகர் வேடத்தில் நீலப்பட்டு உடுத்தி ’கோவிந்தா... கோபாலா... என்ற பக்தர்களின் கோஷத்துடன் கொட்டகுடி ஆற்றில் காலை 6:30 மணியளவில் இறங்கினார். அதன் பின் புதுார், நகராட்சி அலுவலகம் ரோடு, உள்ளிட்ட தெருக்களில் வலம் வந்தார். இந்நிகழ்ச்சி நாயுடு மற்றும் நாயக்கர் மத்திய சங்கத்தலைவர் வடமலைராஜைய பாண்டியன் தலைமையில் நடந்தது. செயலாளர் சுருளிராஜ் முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை நாயுடு மற்றும் நாயக்கர் சங்க இளைஞர் அணியினர், மத்திய சங்க நிர்வாகிகள் செய்தனர். சுவாமி அலங்காரங்களை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். விழாஏற்பாடுகளை கோயில் தக்கார் பாலகிருஷ்ணன் செய்திருந்தார்.

* உப்புக்கோட்டையில் வரதராஜபெருமாள், உப்பார்பட்டி சுந்தரராஜபெருமாள் முல்லையாற்றில் கள்ளழகர் வேடத்தில் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார்.* போடி அருகே தீர்த்ததொட்டி சித்திரபுத்திரனார் கோயிலில் சித்திரபுத்திரனார், சீலைக்காரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயில்,உற்ஸவர் வரதராஜர், கள்ளழகராக குதிரை வாகனத்தில், பச்சை பட்டு உடுத்தி,பச்சை திலகமிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு, வடகரை நாயுடு மண்டபம், அழகர்சாமி புரம், யாதவர் திருமண மண்டபம், மீனாட்சியம்மன் கோயில் உட்பட வடகரை, தென்கரை பகுதிகளில் 40 இடங்களுக்கு சென்றார். மண்டகபடிதாரர்கள் அழகரை, கோலாகலமாக வரவேற்றனர். கள்ளழகர் புறப்பாடு செல்லும் இடங்களில், அழகர் வேஷமிட்ட பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். பக்தர்களுக்கு நீர்மோர், பிரசாதம் வழங்கப்பட்டது. அர்ச்சகர் கண்ணன் கூறியதாவது: பச்சை பட்டு, பச்சை திலகமிட்டு அழகர் காட்சியளித்துள்ளார். இதனால் மழை பெய்து, பசுமை தலைதோங்கும், சகல ஐஸ்வர்யம் கிட்டும்,என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி காவிரி துலாக் கட்டத்தில் ஆதீனங்கள் உள்ளிட்ட ... மேலும்
 
temple news
அரியலூர் ; ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலய கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்; கொட்டும் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை ... மேலும்
 
temple news
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா தற்போது அனைத்து பகுதி யிலும் சிறப்பான முறையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar