Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சக்திமாரியம்மன் கோயிலில் சித்ரா ... சித்ரா பவுர்ணமி விழா அம்மன் வீதி உலா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
’கோவிந்தா... கோபாலா...’ கோஷத்துடன் ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2018
01:05

போடி : போடியில் சீனிவாசப் பெருமாள் கள்ளழகர் வேடத்தில் நீலப்பட்டு உடுத்தி கொட்டகுடி ஆற்றில் இறங்கினார். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு போடி சீனிவாசப்பெருமாள் கள்ளழகர் வேடத்தில் நீலப்பட்டு உடுத்தி ’கோவிந்தா... கோபாலா... என்ற பக்தர்களின் கோஷத்துடன் கொட்டகுடி ஆற்றில் காலை 6:30 மணியளவில் இறங்கினார். அதன் பின் புதுார், நகராட்சி அலுவலகம் ரோடு, உள்ளிட்ட தெருக்களில் வலம் வந்தார். இந்நிகழ்ச்சி நாயுடு மற்றும் நாயக்கர் மத்திய சங்கத்தலைவர் வடமலைராஜைய பாண்டியன் தலைமையில் நடந்தது. செயலாளர் சுருளிராஜ் முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை நாயுடு மற்றும் நாயக்கர் சங்க இளைஞர் அணியினர், மத்திய சங்க நிர்வாகிகள் செய்தனர். சுவாமி அலங்காரங்களை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். விழாஏற்பாடுகளை கோயில் தக்கார் பாலகிருஷ்ணன் செய்திருந்தார்.

* உப்புக்கோட்டையில் வரதராஜபெருமாள், உப்பார்பட்டி சுந்தரராஜபெருமாள் முல்லையாற்றில் கள்ளழகர் வேடத்தில் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார்.* போடி அருகே தீர்த்ததொட்டி சித்திரபுத்திரனார் கோயிலில் சித்திரபுத்திரனார், சீலைக்காரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயில்,உற்ஸவர் வரதராஜர், கள்ளழகராக குதிரை வாகனத்தில், பச்சை பட்டு உடுத்தி,பச்சை திலகமிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு, வடகரை நாயுடு மண்டபம், அழகர்சாமி புரம், யாதவர் திருமண மண்டபம், மீனாட்சியம்மன் கோயில் உட்பட வடகரை, தென்கரை பகுதிகளில் 40 இடங்களுக்கு சென்றார். மண்டகபடிதாரர்கள் அழகரை, கோலாகலமாக வரவேற்றனர். கள்ளழகர் புறப்பாடு செல்லும் இடங்களில், அழகர் வேஷமிட்ட பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். பக்தர்களுக்கு நீர்மோர், பிரசாதம் வழங்கப்பட்டது. அர்ச்சகர் கண்ணன் கூறியதாவது: பச்சை பட்டு, பச்சை திலகமிட்டு அழகர் காட்சியளித்துள்ளார். இதனால் மழை பெய்து, பசுமை தலைதோங்கும், சகல ஐஸ்வர்யம் கிட்டும்,என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar