பெரியகுளம் : பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயிலில், சித்ரா- பவுர்ணமி கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நந்திகேஷ்வரர், கைலாசநாதர், பெரியநாயகிக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. நகராட்சி முன்னாள் தலைவர் ஓ.ராஜா சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.* பெரியகுளம் கம்பம்ரோடு காளியம்மன் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.