Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி சண்முகநதியின் புனிதம் ... திருநீலகண்டநாயனாரின் 100வது ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்காசி, செங்கோட்டை கோயில்களை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2012
12:01

குற்றாலம் : தென்காசி, செங்கோட்டை பகுதியில் உள்ள கன்னியாகுமரி சுசீந்திரம் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத திருக்கோயில் நிர்வாகத்தில் உள்ள கோயில்களை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து இந்து சமுதாய தலைவர்கள் கூட்டம் குலேசகரநாதர் கோயிலில் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் கவுன்சிலர் வெங்கிடாசலம் தலைமை வகித்தார். இன்ஜினியர் கிருஷ்ணன், அனைத்து இந்து சமுதாய கூட்டமைப்பு தலைவர் லட்சுமணப் பெருமாள் பிள்ளை, இலஞ்சி பள்ளி ஆசிரியர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தனர். கணேசன் பட்டர் வரவேற்றார். தற்போது தென்காசி, செங்கோட்டை வட்டத்திலுள்ள கோயில் பணிகளை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகுறது. கடந்த 1956ம் ஆண்டு முதல் இந்த வட்டாரங்களில் உள்ள பல கோயில்கள் கன்னியாகுமரி சுசீந்திரம் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத திருக்கோயில் நிர்வாக பொறுப்பில் உள்ளது. இக்கோயில்களை பக்தர்கள் நலன் கருதி உடனே பிரித்து நெல்லை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் மடத்துப்பள்ளியில் ஊழியர் இல்லாததால் நைவேத்தியம் படைத்து பூஜை செய்ய முடியாத நிலை உள்ளதை தவிர்க்க ஊழியர் நியமிக்க வேண்டும். கோயில்களில் தோரோட்டம் நடக்கும் போது உள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏவிஎஸ் அய்யர் குரூப் நாராயணன், ஆசிரியர்கள் சிவபிரகாசம், செண்பக குற்றாலம், ஓய்வு பெற்ற தாசில்தார் குமரேசன், சின்னச்சாமி தேவர், ரமேஷ் ஆசாரி, தற்காலிக நாட்டாண்மை முருகன், வைத்தியர் கருப்பசாமி, கம்பவுண்டர் குமார், கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஐப்பசி மாத அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில், 84.48 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே நாராயணபுரம், கல்லுப்பட்டி கிராமங்கள் உள்ளது. இங்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை முத்தாலம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar