Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இலங்கையில் உயரமான அனுமன் கெட்ட கனவு வராமல் இருக்க.. கெட்ட கனவு வராமல் இருக்க..
முதல் பக்கம் » துளிகள்
எனக்கே தண்ணி காட்டுறியா? என்ற சொல் வழக்கு எப்படி வந்தது?
எழுத்தின் அளவு:
எனக்கே தண்ணி காட்டுறியா? என்ற சொல் வழக்கு எப்படி வந்தது?

பதிவு செய்த நாள்

02 மே
2018
03:05

சிலர் நம்மை ஏமாற்றினால், ‘என்ன? எனக்கே தண்ணி காட்டுறியா?’ என்று நாம் அவர்களைக் கேட்கிறோம். இந்தச் சொல் வழக்கு முதன் முதலாக வந்தது எப்படி வந்தது தெரியுமா? அக்காலத்தில் குறுநில மன்னன் ஒருவன் ஆவுடையார் கோயில் பகுதி மக்களின் நிலத்தை பறித்துக் கொண்டான். மக்கள் அனைவரும் பேரரசரிடம் சென்று முறையிட்டனர். ஆனால் குறுநில மன்னனோ, “அந்த நிலம் மக்களுடையது என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? அதைக் காட்டினால் அவர்களுக்கு நிலத்தைத் தந்துவிடுகிறேன்” என்று பேரரசரிடம் தெரிவித்தான். மன்னரின் கேள்விக்கு விடை தெரியாமல் திணறிய மக்கள், சிவபெருமானிடம் உண்மையை வெளிக்கொணர பிரார்த்தனை செய்தனர். சிவபெருமான் மாறுவேடத்தில் குறுநில மன்னரிடம் சென்று, “தங்கள் நிலம் எத்தகைய தன்மை உடையது?” என்று கேட்க, “அது நீரில்லாத வறண்ட பூமி” என்றான். அதை சிவபெருமான் மறுத்து, “அது செழிப்பான பூமி, இதற்கு ஆதாரம் உண்டு. இதை இப்பொதே நிரூபிக்கிறேன். நிலத்தைத் தோண்டுங்கள், தண்ணீர் வரும்” என்றார்.

அதன்படியே நிலம் தோண்டப்பட, அந்த இடத்திலிருந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. குறுநில மன்னன், தலைகுனிந்து தன் தவறை ஒப்புக் கொண்டான். அதன்பின் நிலம் மக்களிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. சிவன் தண்ணீரைக் காட்டிய அந்த இடம், ஆவுடையார் கோயிலில் இருந்து சற்று தொலைவில் உள்ளது. இந்தப் பகுதியை ‘கீழ்நீர்க்காட்டி’ என்றழைக்கின்றனர். இந்தச் சம்பவத்தை கோயிலின் பஞ்சாட்சர மண்டபத்தின் மேல் விதானத்தில் ஓவியமாக வரைந்தும் வைத்துள்ளார்கள். இதிலிருந்துதான் ‘தண்ணி காட்டுறியா?’ என்ற சொல் வழக்கு வந்தது என்றொரு கருத்து நிலவுகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
இன்று சதுர்த்தி விரதம். முகுந்த, வர சதுர்த்தி. தை அமாவாசைக்கு பின் வரும் சதுர்த்தி வரசதுர்த்தி ஆகும். ... மேலும்
 
temple news
ஏரியினுள் 1,500 ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் அனந்த பத்மநாபர். சிக்கபல் லாபூர் ... மேலும்
 
temple news
கர்நாடகாவில் பல அம்மன் கோவில்கள் உள்ளன. இருப்பினும், அம்மனை நினைத்து மனம் உருக வேண்டினால், நிமிடத்தில் ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் பீதர் மாவட்டம், வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டம். ஆனால், இங்குள்ள கோட்டைகள், புராதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar