Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலையில் கொட்டி தீர்த்த மழை! சபரிமலையில் நாளை! சபரிமலையில் நாளை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாள் விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2012
12:01

கன்னியாகுமரி : சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்ததின விழா,கேந்திரபள்ளி ஆண்டுவிழா, தேசிய இளைஞர் விழா ஆகிய முப்பெரும் விழா நாளை(12ம் தேதி) கொண்டாடப்படுகிறது. எந்த மதத்தையும் கண்டிக்காததும், எதனையும் விலக்காததுமாகிய கொள்கைகளை தன்னகத்தே கொண்ட சனாதன தர்மம் என்னும் உலகளாவிய மதத்தின் பெருமையினை நவீன யுகத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று துல்லியமாக பறை சாற்றியவர்களில் முதன்மையானவர், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான சுவாமி விவேகானந்தர் ஆவார். தேசத்தினை புத்துயிர் பெறச் செய்யும் சக்திகளுக்கு உயிரூட்டி அவற்றை செயல்பட வைத்தவர்களுள் முதன்மையாக விளங்குகிறார். தேசத்தின் ஆத்மாவாக விளங்கும் இந்து தர்மத்தினை தேசம் முழுவதும் உணரும்படி செய்து அதன்மூலம் தேசமறுசீரமைப்புக்கு அடிக்கல் நாட்டினார் அவர். 2013 ஜனவரி 12 முதல் 2014 ஜனவரி 12 வரையிலும் பாரத தேசத்தின் அனைத்து பகுதிகளிலும் சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த ஆண்டு விழாவினை கொண்டாடிட விமரிசையான முன்னேற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. பல்வேறு அமைப்புகளும், இந்திய அரசும் கூட இதனைச் சிறப்பான முறையில் கொண்டாட திட்டமிடுகின்றன. சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு நாளை (12ம் தேதி) கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவில் முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவிற்கு கேந்திர உதவி தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். மாவட்ட கலெக்டர் மதுமதி, நெல்லை பலகலை.,பதிவாளர் மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். மாலை 6.30 மணிக்கு பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி புனித புளி ஆஞ்சநேயர் கோயில் ராமநவமி விழாவில் ராமர், சீதா திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar