குமாரபாளையம்: சித்திரை வெள்ளிக்கிழமையையொட்டி, குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஐயப்பன் கோவில், வளையக்காரனூர், கள்ளிபாளையம் மாரியம்மன், காளியம்மன், குமாரபாளையம் வட்டமலை முருகன், பாலமுருகன் கோவில், தம்மண்ணன் வீதி தேவாங்கர் மாரியம்மன், சேலம் சாலை மற்றும் ராஜா வீதி சவுண்டம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.