Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகரவிளக்குக்கு முன்னோடியாக ஜன., 13 ... லட்சக்கணக்கானோர் பூ மிதிக்கும் பாரியூர் குண்டம் விழா: காலை முதலே காத்திருந்த பக்தர்கள்! லட்சக்கணக்கானோர் பூ மிதிக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் மேஜையில் அன்னதானம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 ஜன
2012
10:01

ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில், மேஜையில் அன்னதானம் வழங்கப்படுவதால் பக்தர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில், பெரிய மாரியம்மன் கோவில், திண்டல் முருகன் கோவில், வ.உ.சி., பார்க் ஆஞ்சநேயர் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட 15 கோவில்களில், அன்னதான திட்டம் நடந்து வருகிறது. நன்கொடையாளர்களிடம் இருந்தும், கோவில் உண்டியல் வசூலில் இருந்தும் கணிசமான தொகை பெறப்பட்டு, அதன் மூலம் அன்னதானம் வழங்கப்படுகிறது. அதிகப்படியான வருமானம் கிடைக்கும் ஈரோடு கோவில்களில், டேபிள், சேரில் பக்தர்கள் உட்கார வைத்து, அன்னதானம் வழங்கப்பட்டது. நிதி பற்றாக்குறையால் சில கோவில்களில் தரையில் பக்தர்களை அமர வைத்து அன்னதானம் வழங்கப்படுகிறது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில், 2006 முதலே அன்னதான திட்டம் துவக்கப்பட்டு, தினந்தோறும், 50க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. போதிய இடவசதி இல்லாததால், பக்தர்கள் கோவில் பிரகாரத்தில் அமர்ந்து அன்னதானம் உண்டனர். மேஜையில் தான் அன்னதானம் வழங்க வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையடுத்து, ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் மேஜையில், அன்னதானம் வழங்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பக்தர்கள் கூறுகையில், "மேஜையில் அன்னதானம் உணவை பரிமாறுவது வரவேற்கத்தக்கது. ஈரோட்டிலேயே கோட்டை ஈஸ்வரன் கோவில், வ.உ.சி. பூங்கா ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் டேபிள், சேர் அமைத்து உணவு பரிமாறினால், பக்தர்கள் மகிழ்ச்சியடைவர், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar