Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீபம் ... ஹெத்தையம்மன் விழாவில் திரண்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் திருக்கைத்தல சேவை கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 ஜன
2012
10:01

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருக்கைத்தல சேவை கோலாகலமாக நடந்தது. இன்று வேடுபறி விழா நடக்கிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் கடந்த ஐந்தாம் தேதி திறக்கப்பட்டது. தற்போது ராப்பத்து விழா நடந்து வருகின்றது. விழாவின் ஏழாம் நாள் விழாவான திருக்கைத்தல சேவை நேற்று நடந்தது. பிற்பகல் 3.15 மணிக்கு ஸ்ரீரெங்கநாதர் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார். மாலை 4.15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. மாலை 5.45 மணிக்கு திருமாமணி மண்டபம் என்றழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் ரெங்கநாதர் எழுந்தருளினார்.
இதைத்தொடர்ந்து நம்மாழ்வார் பராங்குச நாயகி திருக்கோலத்தில் ஸ்ரீரெங்கநாதர் திருக்கைத்தல சேவை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று திருக்கைத்தல சேவையை கண்டுதரிசித்தனர். உபயக்காரர் மரியாதைக்கு பிறகு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியங்கள் முழங்க மூலஸ்தானத்தை அடைந்தார். இன்று திருமங்கை மன்னனின் வேடுபறி நிகழ்ச்சி நடக்கிறது. ஸ்ரீரெங்கநாதர் குதிரை வாகனத்தில் சந்தனு மண்டபத்தில் இருந்து காலை 4.30 மணிக்கு புறப்பட்டார். இதைத்தொடர்ந்து மணல் வெளியில் வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடக்கிறது. திருமங்கை மன்னனுக்கு ஞானம் பிறந்த கதை நடித்துக் காட்டப்படுகின்றது. இந்த கண்கொள்ளாகாட்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவர். இதன் பிறகு அரையர் சேவை நடக்கிறது. உபயக்காரர் மரியாதைக்கு பிறகு திருமாமணி மண்டபம் என்றழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியங்கள் முழங்க ஸ்ரீரெங்கநாதர் மூலஸ்தானத்தை அடைகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சை;  உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும் என சமூக ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவில் உள்ள வீரமாச்சி அம்மன் கோவிலில் திருவிழா நடக்கிறது. கிணத்துக்கடவு, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் திருப்பதி பெரிய ஜீயர் வழிபாடு செய்தார். துலா ... மேலும்
 
temple news
சிந்துவெளி மக்கள் குதிரையை அறியாதவர்கள், சிந்துவெளியில் மகாபாரதத்துக்கான சான்றுகள் இல்லை என ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கோரிமேடு அடுத்த இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் உள்ள ேஷத்திரபால பைரவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar