Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 2,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் ... பவளமலை முருகன் கோவிலில் கோ பூஜை பவளமலை முருகன் கோவிலில் கோ பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏற்காட்டில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
ஏற்காட்டில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

09 மே
2018
12:05

ஏற்காடு: சேலம் மாவட்டம், ஏற்காட்டில், 13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு, மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட, கேளையூர் கிராமத்தில், தொல்குடிகளின் பண்பாட்டை அறியும் நோக்கோடு, ஏற்காடு வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, புளியூர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அங்கு, திரவுபதி அம்மன் கோவில் அருகில், கல்வெட்டு ஒன்றை கண்டுபிடித்தனர்.

இது குறித்து, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: கல்வெட்டில், திரிபுவன சக்கரவர்த்தி சிரிசுந்தர பாண்டியரின் ஆட்சிக்காலத்தில், மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள், சேலநாடு என்றும், இப்பகுதியில் சேலஞ்சுற்றி என்பவர் பொறுப்பாளராக இருந்துள்ளார் என்றும், தற்போதுள்ள கோவிலூர் கிராமத்தை, பெருமாமலை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதியில், வானீஸ்வரர் என்ற சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவனை, கூடலுடையார் என்று அழைத்துள்ளனர். கேளையூர் பகுதியில் உள்ள, பாறைக்கரை என்ற இடத்தின் வடக்கு பகுதியை, இரண்டு சூலக்கல்லுக்கு தானமாக விடப்பட்டுள்ளது என்றும், கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதே பகுதியில், 2,500 ஆண்டு பழமையான, ஆறடி உயரம் கொண்ட நெடுங்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தொன்மையான நாகரீகத்தை கொண்ட, தொல்குடிகள் இங்கு வாழ்ந்ததை கண்டறிய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar