விருத்தகிரீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2018 01:05
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு, சித்திரைமாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் காசிவிஸ்வநாதர் கோவிலைப்போன்று வாகனம் இல்லாமல் காலபைரவர் சன்னதி உள்ளது. இங்கு, தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியான நேற்று மாலை எண்ணெய், சந்தனம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிேஷகம் செய்து, மலர்களால் அலங்கரித்து, மகாதீபாராதனை நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்று எள், நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர்.