திருப்பரங்குன்றத்தில் விசாக திருவிழா: மே 19ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2018 11:05
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் விசாக திருவிழா மே 19ல் துவங்குகிறது. உற்ஸவர் சுவாமி, தெய்வானை, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக, ஆராதனை முடிந்து காப்பு கட்டப்படும். இரவு 7:00க்கு சுவாமி, தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார்.30 நிமிடம் வசந்த உற்சவம் நடக்கும். மே 28 அதிகாலை 5:00 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து, காலை 7:00 மணிக்கு விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவர். சுவாமிக்கு மதியம் 2:00 மணி வரை அபிஷேகம் செய்யப்படும். மே 29 காலை உற்சவர் சுவாமி, தெய்வானை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் எழுந்தருளி மொட்டையரசு திருவிழா நடக்கும்.