செஞ்சி:ஆனாங்கூர் மாரியம்மன், கெங்கையம்மன், முனீஸ்வரன் கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.செஞ்சி தாலுகா ஆனாங்கூரில் உள்ள மாரியம்மன், கெங்கையம்மன், முனீஸ்வரன் கோவில்களுக்கு திருப்பணிகள் செய்து கடந்த ஆண்டு மகா கும்பாபிஷேகம் செய்தனர். இதன் முதலாம் ஆண்டு விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் செய்தனர். காலை 7:00 மணிக்கு முனீஸ்வரன் கோவிலில் கலச பிரதிஷ்டை செய்துவிக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமமும், 9:00 மணிக்கு கலசாபிஷேகமும் செய்தனர்.தொடர்ந்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு ஹோமம் செய்து மாரியம்மன், கெங்கையம்மனுக்கு கலசாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.