பதிவு செய்த நாள்
16
மே
2018
11:05
பழநி: பழநி, கோடை விடுமுறைகால சிறப்பு ரயில்கள் நிறுத்தப்பட்டு ள்ளதால், பழநி ரயில் களில் இடம் கிடைக்காமல் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
பழநி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநில, நாடுகளில் இருந்தும் பக்தர் கள் அதிகளவில் வருகின்றனர். குறிப்பாக விடுமுறைநாட்களில் பக்தர்களின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது.
பழநி வழியாக திருச்செந்தூர்- - பாலக்காடு, சென்னை- - பாலக்காடு, மதுரை - -திருவனந்தபுரம், கோவை - -மதுரை ரயில்கள் தினமும் இயக்கப்படுகிறது.கோவை - -திருநெல்வேலி, செங் கோட்டைக்கு பழநி, மதுரை வழியாககோடைகால சிறப்புகள் அறிவித்து பின், அவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
மதுரை, கோவை, திருச்செந்தூர், பாலக்காட்டில் இருந்து வரும்போதே ரயில்கள் நிரம்பி வருகிறது. நேற்று (மே 15)ல் கார்த்திகை, அமாவாசை, மாதப் பிறப்பை முன்னிட்டு பழநி - கோவை, திருச்செந்தூர் ரயில்களில் பக்தர்கள், உள்ளூர் மக்கள், வியாபாரிகள் இடம் கிடைக் காமல் பாதிக்கப்படுகின்றனர். ஆன்மிக சுற்றுலா தலமான பழநிக்கென திண்டுக்கல், மதுரை, கோவையில் இருந்து விடுமுறை, விழாக்காலங்களில் மட்டுமாவது ரயில்கள் இயக்க வேண் டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.