பதிவு செய்த நாள்
16
மே
2018
11:05
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலில், தமிழக முதல்வர், பழனிசாமி, தன் குடும்பத் துடன் வழிபாடு நடத்தினார்.ஆந்திர மாநிலம், திருமலையில் உள்ள, ஏழுமலையானை தரிசிக்க, நேற்று முன்தினம் (மே 14)ல், தன் குடும்பத்துடன் திருமலைக்கு வந்த, தமிழக முதல்வர் பழனி சாமி, நேற்று (மே 15)ல், காலை, அஷ்டதளபாத பத்மாராதனையில், ஏழுமலையானை தரிசித்தார். தரிசனம் முடித்து வெளியில் வந்த அவர், வகுளமாதா சன்னதி, விமான வெங்கடேஸ்வர சுவாமி, யோகநரசிம்ம சுவாமி, பாஷ்யங்காரர் சன்னதி உள்ளிட்ட இடங்களிலும் வழிபாடு நடத்தினார். முதல்வரை, ரங்கநாயகர் மண்டபத்தில் அமர வைத்து, வேத ஆசீர்வாதம் செய்வித்து, ஏழுமலை யான் திருவுருப்படம், தீர்த்தம், லட்டு, வடை உள்ளிட்டவற்றை, தேவஸ்தான அதிகாரிகள் வழங் கினர். அங்கு வந்த உடுப்பி மடாதிபதியிடம், ஆசி பெற்ற தமிழக முதல்வர், கோவில் எதிரில் உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டு, அகண்டம் முன், ஏழுமலையானுக்கு தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டினார்; பின் சென்னை புறப்பட்டு சென்றார்.