பதிவு செய்த நாள்
16
மே
2018
12:05
ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசையைமுன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர்.
ஆனைமலை மாசாணியம்மன் கோவில், மாவட்டத்தின் முக்கிய ஆன்மிக தலமாக திகழ் கிறது. கோவை மட்டுமின்றி, சேலம், மதுரை, ஈரோடு, திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.செவ்வாய், வெள்ளிக்கிழமை கள் மற்றும் விசேஷ தினங்களில், ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
நேற்று (மே 15)ல், அமாவாசையை முன்னிட்டு பல மாவட்டங் களில் இருந்து, லட்சக்கணக் கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர். அம்மனுக்கு காலை, 6:30 மணிக்கு முதல் கால பூஜை; காலை, 11:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை; மாலை, 4:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை மற்றும் மாலை, 6:30 மணிக்கு நான்காம் கால பூஜை நடந்தது.
நேற்று முன்தினம் (மே14)ல் இரவு முதலே பக்தர்கள் கோவிலுக்கு வரத்துவங்கினர். இதனால், பொள்ளாச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆனைமலைக்கு சிறப்பு பஸ் கள் இயக்கப்பட்டன. கோவில் நிர்வாகத்தினர், ஆனைமலை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.